Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன், சென்னை அசோக்நகர் உள்ள அவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இசைக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த போலீஸார் ராமன் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். ராமன் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலி காரணாக ராமன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.